search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்ளூர் விடுமுறை"

    • மாமன்னர் ராசேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை அன்று விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது
    • அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது

    அரியலூர்:

    மாமன்னர் ராசேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடித்திருவாதிரை அன்று அரசு விழாவாக கொண்டாடப்படுவதால், அரியலூர் மாவட்டத்துக்கு ஜூலை 26 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ரமணசரஸ்வதி தெரிவி–த்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தை உலக பிரதான பாரம்பரிய சின்னமாக யுனோஸ்கோ அறிவித்து, அதனை பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆலயத்தை கட்டிய மாமன்னர் ராசேந்திரன் சோழன் பிறந்த நாளான ஆடித் திருவாதிரை அன்று விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிகழாண்டு இவ்விழாவை தமிழக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை மூலமாக அரசு விழாவாக நடத்த தமிழக அரசு அரசாரணை வெளியிட்டது.

    அதன்படி வரும் 26 ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் ராசேந்திரன் சோழன் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவதால்,

    அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இருப்பினும் இந்த உள்ளுர் விடுமுறையானது தமிழ்நாடு அரசு பள்ளித்தேர்வுத்துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தேர்வுகளுக்கு (மெட்ரிக், ஆங்கிலோ இண்டியன் பள்ளித்தேர்வுகள் உட்பட) பொருந்தாது. அவை ஏற்கனவேஅரசால் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்ட நாளில் நடை பெறும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

    இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, 06.08.2022 (சனிக்கிழமை) அன்று முழுவேலை நாளாக ஆணையிடப்பட்டுள்ளது.

    விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுர் விடுமுறை நாளில் அனைத்து சார்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டும், குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும் வாவுபலி தினத்தினை முன்னிட்டு 28-ந்தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
    • 28-ந்தேதி அன்று உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 13-8-22 அன்று இயங்கும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத் திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும் வாவுபலி தினத்தினை முன்னிட்டு வியாழக்கிழமை (28-ந்தேதி) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

    28-ந்தேதி அன்று உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 13-8-22 (சனி) கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக இருக்கும். 28-ந்தேதி அன்று கன்னியா குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப்பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும்.

    இவ்வாறு கூறி உள்ளார்.

    • 108 வைணவ ஸ்தலங்களில் சிறப்புமிகுந்த திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் சுமார் 450 வருடங்களுக்கு பிறகு நடக்கிறது.
    • திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலாரமேஷ், அமைச்சர் மனோதங்க ராஜை சந்தித்து கும்பாபிஷேகத்திற்கு உள்ளூர் விடுமுறை விட மனு

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் 108 வைணவ ஸ்தலங்களில் சிறப்புமிக்கது. இங்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தி சுமார் 450 வருடங்க ளாகி விட்ட நிலையில் கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனை ஏற்று திரு ப்பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்து வதற்கு முதலமைச்சர் உத்தர விட்டார். இதனைத் தொடர்ந்து தேவபிரசன்னம் பார்க்கப்பட்டு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்க்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலாரமேஷ், அமைச்சர் மனோதங்க ராஜை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில், அனைத்து தரப்பினரும் கும்பாபிசேகத்தில் கலந்து கொள்ள வசதியாக ஜூலை 6ந்தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்.

    பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க அன்றைய தினம் திருவட்டார் டாஸ்மார்க் கடையை மூட வேண்டும். திருவட்டார் பஸ்நிலைய சந்திப்பிலிருந்து ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு செல்லும் சாலையின் இருபக்கங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்து நெருக்கடிகளை சரி செய்ய வேண்டும்.

    கோயிலை சுற்றி பக்தர்களின் பாதுகாப்புக்காக நிரந்தரமாக கண்காணிப்பு கேமரா க்கள் அமைக்க வேண்டும்என குறிப்பிட்டுள்ளார்.

    ×